வங்கதேச தேர்தலில் தாரிக் ரஹ்மான் அதிரடி வெற்றி நரேந்திர மோடியின் வாழ்த்தால் இந்தியா வங்கதேச உறவில் புதிய திருப்பம்

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கட்சி 210 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வரலாற்று வெற்றிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தாரிக் ரஹ்மானின் வெற்றி வங்கதேச மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்றும், ஒரு ஜனநாயக மற்றும் உள்ளடக்கிய வங்கதேசத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும் மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாழ்த்துக்கு பிஎன்பி கட்சி நன்றி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் நஸ்ருல் இஸ்லாம் கான், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இனி வரும் காலங்களில் மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தாரிக் ரஹ்மானின் ‘வங்கதேசம் முதன்மை’ என்ற கொள்கையின் கீழ், பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவில் ஒரு புதிய வசந்தம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.