செனாப் நதி நீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் புதிய பிடிவாதம்
February 13, 2026

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் பகுதியில் செனாப் ஆற்றின் குறுக்கே அமையுள்ள 1,856 மெகாவாட் சோவால்கோட் நீர்மின் திட்டம் குறித்து இந்தியாவிடம் பாகிஸ்தான் விளக்கம் கேட்டுள்ளது. 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி தகவல்களை வழங்குமாறு கோரி இந்திய ஆணையருக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. கடந்த ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த ஒருதரப்பு நடவடிக்கை சட்டப்பூர்வ உண்மையை மாற்றாது என்றும், சர்வதேச சட்ட ரீதியாக இந்த சிக்கலை எதிர்கொள்ளத் தயார் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு மிக முக்கியமான இந்த சோவால்கோட் திட்டம், செனாப் ஆற்றின் இயற்கையான ஓட்டத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.