35 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்தின் தலையெழுத்து மாறுகிறதா

35 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்தின் தலையெழுத்து மாறுகிறதா

வங்கதேசத்தில் 35 ஆண்டுகால பெண் தலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார். சமீபத்திய பொதுத்தேர்தலில் பிஎன்பி கூட்டணி 212 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. அடுத்த வாரம் புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், இது அந்நாட்டு அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

தேர்தலுடன் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அரசு சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளதால், அரசியலமைப்பில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையில், ஜமாஅத் கூட்டணி 70 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. 18 மாத இடைக்கால ஆட்சிக்குப் பிறகு இந்த வெற்றி அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *