பால் முதல் மருந்து வரை ஜிஎஸ்டி ஷாக்: சாமானியர்களின் பாக்கெட் காலி?

செய்திப் பிரிவு: சாமானிய மக்களின் சமையலறை பட்ஜெட் கட்டுக்கடங்காமல் போகிறதா? பால் மீது வரி இல்லை என்று சொல்லப்பட்டாலும், பால் பவுடர் மீது 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி, பென்சில் மற்றும் ஆய்வகக் குறிப்பேடுகள் (Lab Notebooks) மீதான 12 சதவீத வரி மாணவர்களுக்குச் சுமை இல்லையா என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுகாதார சேவைகளுக்கு வரி விலக்கு இருப்பதாகக் கூறப்பட்டாலும், இன்சுலின் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான கூடுதல் செலவுகள் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். இறுதிச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் ஊதுபத்திக்கும் வரி செலுத்த வேண்டிய அவலம் நீடிக்கிறது. ஜிஎஸ்டி சட்டத்தின் சிக்கல்களால் ஏழை மக்களின் மளிகைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாக மோடி அரசுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ‘புதிய இந்தியா’ சாமானியர்களின் பாக்கெட்டை இன்னும் பதம் பார்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.