தீகாக் கடலோரத்தில் 2 புதிய விசித்திர உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

தீகாக் கடலோரத்தில் 2 புதிய விசித்திர உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

மேற்கு வங்கத்தின் தீகா மற்றும் வங்கிபுட் கடற்கரைப் பகுதிகளில் ‘அனெலிடா’ (Annelida) வகையைச் சேர்ந்த இரண்டு புதிய கடல் புழு இனங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் (ZSI) மற்றும் மெக்ஸிகோ நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ‘நெரிடிட் வார்ம்’ (Nereidid worm) எனப்படும் கடல் புழுக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் ஒரு வகை புழுவிற்கு அதன் தனித்துவமான தாடை அமைப்பைக் கொண்டு ‘நாமலிகாஸ்டிஸ் சோலெனோடோநாதா’ (Namalycastis solenotonatha) எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்றொரு வகைக்கு ZSI-இன் முதல் பெண் இயக்குநரான திருதி பானர்ஜியின் நினைவாக ‘நெரிஸ் திருதி’ (Nereis dhritiae) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

2025 ஜூலை மாதம் கண்டறியப்பட்ட இந்த உயிரினங்கள், கடினமான சூழலிலும் உயிர்வாழும் திறன் கொண்டவை. கடல்சார் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதிலும், மண்ணில் ஆக்சிஜன் சுழற்சியை மேம்படுத்துவதிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. வங்காள விரிகுடா பகுதி பல்லுயிர் பெருக்கத்தில் எவ்வளவு சிறந்து விளங்குகிறது என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு சான்றாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *