5-ஆம் தலைமுறை போர் விமானம்: HAL விலகலால் பின்னடைவா? தனியார் வசம் செல்லும் பாதுகாப்புத்துறை!

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்பை பலப்படுத்தும் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான AMCA திட்டத்தில் இருந்து, பொதுத்துறை நிறுவனமான HAL (Hindustan Aeronautics Limited) விலகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேஜஸ் போர் விமானங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் 2028-ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் 5-ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் இந்தியாவின் கனவு நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது டாடா (Tata) அல்லது கல்யாணி (Kalyani) போன்ற தனியார் நிறுவனங்களே இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் மயமாக்கல் மூலம் வேகம் மற்றும் தரம் கூடும் என்றாலும், ஒரு அரசு நிறுவனம் இவ்வளவு பெரிய திட்டத்தில் இருந்து பின்வாங்குவது பாதுகாப்பு வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.