இந்தியா-பாகிஸ்தான் மோதல்: மழையால் ஆட்டம் நிற்குமா? கொழும்பு வானிலை முக்கிய அப்டேட்!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பை ஹை-வோல்டேஜ் போட்டி வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. இலங்கையின் கணிக்க முடியாத வானிலையால் இப்போட்டி பாதிக்கப்படுமா என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
பிப்ரவரி 12 முதல் 14 வரை கொழும்பு நகரில் பலத்த மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருந்தாலும், போட்டி நடைபெறும் பிப்ரவரி 15 அன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமே தவிர, மழை பெய்ய வாய்ப்பில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் 20 ஓவர் பரபரப்பான ஆட்டத்தை முழுமையாக ரசிக்க முடியும்.
பாகிஸ்தானின் ஷாஹீன் ஷா அப்ரிடியின் வேகப்பந்து வீச்சை, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் அதிரடி பேட்டிங் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதுவரை இவ்விரு அணிகளும் டி20 தொடர்களில் மோதிய 16 போட்டிகளில் 13-ல் வெற்றி பெற்று இந்தியா மிகப்பெரிய முன்னிலையில் உள்ளது. ஆசியக் கோப்பையில் தொடர் தோல்விகளைச் சந்தித்த பாகிஸ்தான் பழிவாங்கத் துடித்தாலும், புள்ளிவிவரங்கள் டீம் இந்தியாவிற்கு சாதகமாகவே உள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போர் மழையின் குறுக்கீடு இன்றி முழுமையான 40 ஓவர் ஆட்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.