பேர்ட் ஃபுளு பீதி: சிக்கன் சமைக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
February 10, 2026

பரவி வரும் பேர்ட் ஃபுளு (பறவைக் காய்ச்சல்) செய்திகளால் சிக்கன் சாப்பிடவே பயப்படுகிறீர்களா? கவலை வேண்டாம், முறையாகக் கையாண்டால் சிக்கன் சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது என்கின்றனர் நிபுணர்கள். ஆனால், உங்கள் சமையலறை பழக்கவழக்கங்களில் சிறு தவறு நடந்தால் அது ஆபத்தாக முடியலாம்.
சிக்கனை வெறும் தண்ணீரில் மட்டும் கழுவுவது இப்போது போதுமானதல்ல. பாதுகாப்பை உறுதி செய்ய இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:
- ஊறவைத்தல்: சந்தையிலிருந்து கொண்டு வந்த சிக்கனை வினிகர், எலுமிச்சை சாறு அல்லது உப்பு கலந்த நீரில் குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். இது கிருமிகளின் வீரியத்தைக் குறைக்க உதவும்.
- சுத்தம்: சமைப்பதற்கு முன் தோலை (Skin) அகற்றுவது நல்லது. சிக்கனைக் கையாண்ட பிறகு கைகளையும், பயன்படுத்திய பாத்திரங்களையும் சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.
- சரியான வெப்பம்: சிக்கனைப் பாதி வேக்காட்டில் எடுக்காமல், அதிக வெப்பநிலையில் நன்கு வேகவைத்து சமைப்பதன் மூலம் தொற்று அபாயத்தைத் தவிர்க்கலாம்.
பீதியடையாமல், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஆரோக்கியமாகச் சமைத்து உண்ணுங்கள்.