ஒரே ஒரு கியூஆர் கோடு ஸ்கேன் உங்கள் வங்கி கணக்கை காலி செய்யக்கூடும் ஜாக்கிரதை
February 9, 2026

சமீபகாலமாக பொது இடங்களில் உள்ள கியூஆர் கோடு ஸ்டிக்கர்களை மாற்றி, மோசடி கும்பல் போலி கோடுகளை ஒட்டி பணத்தை திருடி வருகிறது. டீக்கடைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை குறிவைத்து நடக்கும் இந்த மோசடியில், ஸ்கேன் செய்தவுடன் பணம் நேரடியாக குற்றவாளிகளின் கணக்கிற்கு சென்றுவிடுகிறது.
அவசரத்தில் பின் (PIN) எண்ணை உள்ளிடும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி இருப்பு திருடப்படலாம். எனவே பணப்பரிமாற்றம் செய்யும் முன் கியூஆர் கோடு நம்பகமானதுதானா என்பதை உறுதிப்படுத்துவதுடன், சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது செயலிகளை தவிர்க்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.