இந்து அமைப்புகள் ஹசீனாவின் ‘வளர்ப்பு நாய்கள்’! ஷபிகுல் ஆலமின் கருத்தால் சர்ச்சை

இந்து அமைப்புகள் ஹசீனாவின் ‘வளர்ப்பு நாய்கள்’! ஷபிகுல் ஆலமின் கருத்தால் சர்ச்சை

வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல் ஆலம், இந்து அமைப்புகளைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். ‘இந்து பௌத்த கிறிஸ்துவ ஐக்கிய கவுன்சில்’ போன்ற அமைப்புகள் ஷேக் ஹசீனாவின் “வளர்ப்பு நாய்கள்” போல செயல்படுவதாக அவர் சாடினார். கடந்த ஓராண்டில் ஒரே ஒரு இந்து மட்டுமே மத ரீதியாகக் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தனிப்பட்ட விரோதம் அல்லது கொள்ளைச் சம்பவங்களே தவிர, அவை வகுப்புவாத வன்முறை அல்ல என்று அவர் வாதிட்டார். மேலும், இந்திய-வங்கதேச உறவுகள் குறித்துப் பேசுகையில், வங்கதேசத்தை பூட்டான் என்று இந்தியா தவறாக நினைக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *