சைக்கிள் மெக்கானிக் மகனுக்கு அரசு வேலை, பணி நியமன ஆணையை கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த தந்தை

செய்தி பிரிவு : ஒரு தந்தையின் வாழ்நாள் உழைப்பிற்கும் தியாகத்திற்கும் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் அவரது பிள்ளையின் வெற்றிதான். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதில், சைக்கிள் மெக்கானிக் வேலை செய்யும் ஒரு தந்தையிடம் அவரது மகன் சிஐஎஸ்எஃப் (CISF) பணி நியமன ஆணையை வழங்குகிறார். வறுமையிலும் விடாமுயற்சியால் சாதிக்க நினைக்கும் சாமானிய மக்களுக்கு இந்தத் தருணம் ஒரு பெரும் உத்வேகமாகும்.
தனது கடையில் வேலை செய்து கொண்டிருந்த தந்தையிடம் அந்த இளைஞர் அரசு வேலைக்கான கடிதத்தை நீட்டினார். அதைப் பார்த்த தந்தை, மகனை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரை கண் கலங்கச் செய்தது. ஒரு தந்தைக்கு இதைவிடப் பெரிய மகிழ்ச்சி இருக்க முடியாது எனப் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடின உழைப்பு ஒருபோதும் தோற்காது என்பதற்கு இந்த நெகிழ்ச்சியான சம்பவமே சாட்சி.