தந்தை இறந்துவிட்டதாகக் கூறி 13 வயது மகளை முதியவருக்கு விற்ற தாய், காதலனுடன் எஸ்கேப்

செய்தி பிரிவு : பெற்ற தாயே தன் மகளின் வாழ்க்கையை சீரழித்த கொடூர சம்பவம் ஜார்க்கண்டில் அரங்கேறியுள்ளது. ஒரு தாய் தனது காதலனுடன் செல்வதற்கு தடையாக இருந்த 13 வயது மகளை, 55 வயது முதியவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தன் கணவன் இறந்துவிட்டதாக மகளிடம் பொய் கூறி இந்தத் துரோகத்தைச் செய்துள்ளார். இத்தகைய நிகழ்வுகள் சமூகத்தில் உள்ள அப்பாவி பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்திலிருந்து தந்தை ஊர் திரும்பிய பிறகே இந்தச் சதி வெளிச்சத்திற்கு வந்தது. அவர் தனது மகளை மீட்டு காவல்துறைக்குத் தகவல் அளித்ததன் பேரில், அந்தச் சிறுமி நரக வாழ்க்கையிலிருந்து மீட்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட முதியவரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தன் மகளை விலைக்கு விற்ற அந்தத் தாயைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயல், குழந்தைகளைப் பாதுகாப்பதில் சமூகத்தின் விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறது.