சுற்றுலா விசாவில் வந்து அரசியல் செய்த வெளிநாட்டு பயணிகள், இந்தியாவுக்குள் இனி விதிகள் இன்னும் கடுமையாகும்

செய்திப் பிரிவு : ராஜஸ்தான் மாநிலம் புஷ்கருக்கு சுற்றுலா வந்த பிரிட்டிஷ் குடிமகன் லூயிஸ் கேப்ரியல் மற்றும் அவரது தோழி எம்மா கிறிஸ்டின் ஆகியோர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அஜ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வந்துவிட்டு, பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர்களை ஒட்டி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதே இதற்கு காரணமாகும். சுற்றுலாப் பயணிகள் நாட்டின் சட்டங்களையும் விசா விதளையும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாகும்.
இந்த நடவடிக்கை சுற்றுலாத் தலங்களில் இனி கூடுதல் கண்காணிப்பு மற்றும் கெடுபிடிகளுக்கு வழிவகுக்கும். வெளிநாட்டினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது உள்ளூர் அமைதியைப் பாதிக்கலாம் என்பதால் நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. விதிகளை மீறுவது உங்கள் பயணத்தை பாதியிலேயே முடிவுக்கு கொண்டு வரும் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.