மீன் சாப்பிடும்போது முள் குத்தும் என்ற பயம் இனி வேண்டாம்! சீனாவின் புதிய கண்டுபிடிப்பு சாமானியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமா?

மீன் சாப்பிடும்போது முள் குத்தும் என்ற பயம் இனி வேண்டாம்! சீனாவின் புதிய கண்டுபிடிப்பு சாமானியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமா?

ஒரு பார்வை செய்தி பிரிவு : மீன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் அதில் உள்ள சிறு முட்களைப் பிரித்து எடுப்பதுதான் பலருக்கும் பெரும் சவாலாக இருக்கிறது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக சீன விஞ்ஞானிகள் தற்போது முட்களே இல்லாத புதிய வகை மீனை உருவாக்கியுள்ளனர். ‘CRISPR’ எனும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த மீனில், தொண்டையில் சிக்கக்கூடிய சிறு முட்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. இது சாமானிய மக்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ஆறு ஆண்டுகால உழைப்பில் உருவான இந்த ‘ஜோங்கே எண் 6’ வகை மீன், சாதாரண மீன்களைப் போன்றே சுவையும் சத்துக்களும் கொண்டது. இது வழக்கமான மீன்களை விட 25% வேகமாக வளர்வதால், சந்தையில் மீன் விலை குறையவும் வாய்ப்புள்ளது. மேலும், இந்த மீன்கள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஆய்வகத்தில் முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இனி முள் குத்தும் பயமின்றி அனைவரும் தைரியமாக மீன் உணவை ரசிக்க முடியும் என்பதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *