சிற்றன்னையுடன் ஓட்டம் பிடித்த மகன் தந்தையின் வாழ்க்கையை சீரழித்த விபரீத காதல்
February 9, 2026

செய்தி பிரிவு : ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு சிறுவன் தனது சிற்றன்னையையே காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். பாதிக்கப்பட்ட ராம்கிஷன் தனது இரண்டாவது மனைவியுடன் 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவரது முதல் மனைவியின் மகன் இவர்களுடன் வந்து தங்கியுள்ளான். அந்த குறுகிய காலத்தில் சிற்றன்னைக்கும் மகனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
யாருக்கும் தெரியாமல் ஒரு நள்ளிரவில் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளுடன் இருவரும் மாயமாகினர். அவர்கள் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. தனது மனைவியும் மகனும் செய்த இந்த துரோகத்தால் நிலைகுலைந்துள்ள தந்தை, தங்களுக்கு நீதி கேட்டு முதலமைச்சரின் குறைதீர்ப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார்.