டிஜிட்டல் நோட் எடுக்கும் வசதியுடன் டிசிஎல் நிறுவனத்தின் சக்திவாய்ந்த பேப்பர் டேப்லெட் அறிமுகம்

டிசிஎல் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான டிசிஎல் நோட் ஏ1 நெக்ஸ்ட்பேப்பர் சாதனத்தை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 11.5 இன்ச் அளவிலான பெரிய டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரும் இந்த சாதனம் டிஜிட்டல் முறையில் வாசிப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 8000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி பயனர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்குகிறது. மேலும் கண்களின் பாதுகாப்பிற்காக ப்ளூ லைட் பாதிப்பைக் குறைக்கும் சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட்டில் மீடியாடெக் ஜி100 ப்ராசஸர் மற்றும் 8ஜிபி ரேம் வசதி உள்ளது. குறிப்பாக இதில் உள்ள ஏஐ கருவிகள் மீட்டிங் சுருக்கம் மற்றும் நிகழ்நேர மொழிபெயர்ப்பிற்கு உதவுகின்றன. 13 எம்பி கேமரா மற்றும் எட்டு மைக்ரோஃபோன்கள் கொண்ட இந்த சாதனம் அலுவலக பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது. தற்போது அமெரிக்காவில் சுமார் 37,700 ரூபாய்க்கு முன்பதிவு செய்ய கிடைக்கும் இந்த சாதனம் விரைவில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படுகிறது.