வெளிநாட்டு சந்தைகளில் இந்திய பழ ரசங்களின் ஆதிக்கம் மாம்பழம் மற்றும் ஆப்பிளைத் தொடர்ந்து ஜாமூன் ஒயின் சாதனை

இந்திய ஒயின் சந்தை தற்போது திராட்சையைத் தாண்டி மாம்பழம், ஆப்பிள் மற்றும் ஜாமூன் போன்ற பழங்கள் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் ஒயின் ஏற்றுமதி இரண்டு மடங்கு அதிகரித்து 6.7 மில்லியன் டாலரை எட்டியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து அமெரிக்காவிற்கு முதன்முறையாக ஜாமூன் பழத்தில் தயாரிக்கப்பட்ட ஒயின் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, இது இந்திய ஒயின் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
யுஏஇ, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்திய பழங்களின் தனித்துவமான சுவையை விரும்பி நாடுகின்றனர். புனேவின் மாம்பழ ஒயின் மற்றும் காஷ்மீரின் ஆப்பிள் ஒயின் ஏற்கனவே பிரிட்டன் சந்தைகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிக வரி விதிப்பு போன்ற சவால்கள் இருந்தபோதிலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் நுகர்வோர் புதிய சுவைகளை முயற்சிப்பதில் ஆர்வம் காட்டுவதால், இந்திய தயாரிப்புகளுக்கான மவுசு உலக அரங்கில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.