உணவு உண்ணும் போது கண்ணீர் வடிக்கும் விலங்கு எது பொது அறிவு தேர்வில் பலரை திணறடித்த கேள்வி
December 28, 2025

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொது அறிவுத் தகவல்கள் மிகவும் அவசியமானவை. அந்த வகையில் உணவு உண்ணும் போது அழுதுகொண்டே இருக்கும் விலங்கு எது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கான சரியான விடை முதலை ஆகும். முதலைக் கண்ணீர் என்பது வெறும் பொய்க்கதை என்று பலர் கருதினாலும், இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான அறிவியல் உண்மை ஒளிந்துள்ளது.
முதலைகள் உணவை மெல்லும்போது அவற்றின் தாடைகளின் அசைவினால் சைனஸ் பகுதிக்குள் காற்று நுழைகிறது. இது அவற்றின் கண்ணீர் சுரப்பிகளைத் தூண்டுவதால் கண்களில் இருந்து நீர் வெளிவருகிறது. இதனை ஆய்வாளர்கள் ‘குரோக்கடைல் டியர் சின்ட்ரோம்’ என்று அழைக்கின்றனர். அமெரிக்க முதலைகள் மற்றும் கெய்மன்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த உண்மை கண்டறியப்பட்டது.