சருமத்தில் ஏற்படும் இந்த தடிப்புகளை அலட்சியப்படுத்தாதீர்கள் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் நிபுணர்கள் எச்சரிக்கை

சருமத்தில் ஏற்படும் இந்த தடிப்புகளை அலட்சியப்படுத்தாதீர்கள் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் நிபுணர்கள் எச்சரிக்கை

பாதங்கள் அல்லது கைகளில் தோல் தடித்துப் போவதை ‘ஆணி’ அல்லது ‘கால் ஆணி’ என்று அழைக்கிறோம். தவறான அளவு காலணிகளை அணிவது அல்லது வெறும் காலில் நடப்பதால் ஏற்படும் உராய்வு காரணமாக தோல் கடினமாகி இப்பாதிப்பு ஏற்படுகிறது. பலர் இதை பிளேடு அல்லது கூர்மையான பொருட்களைக் கொண்டு தாமாகவே அகற்ற முயல்கின்றனர். இச்செயல் கடுமையான தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது பெரிய புண்ணாக மாறி ஆபத்தை விளைவிக்கும்.

இப்பிரச்சனையைத் தவிர்க்க சரியான அளவுள்ள காலணிகளை அணிவது மற்றும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியம். குளிக்கும்போது நுரைக்கல் கொண்டு மென்மையாகத் தேய்ப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்றலாம். இருப்பினும் ஆணியில் வலி, வீக்கம் அல்லது சீழ் வடிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து முறையான சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *