கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்திய மணமகன் அதே பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு கதறிய நெகிழ்ச்சி சம்பவம்

தோல் நிறத்தைக் காரணம் காட்டி ஸ்வேதா என்ற பெண்ணை மணமேடையில் வைத்து நிராகரித்தார் ஒரு வார். ஆனால் விதி வலியது; சில காலத்திற்குப் பிறகு அதே நபர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், ஸ்வேதாவின் தந்தையாலேயே காப்பாற்றப்பட்டார். ஸ்வேதா அவருக்கு அளித்த அன்பான கவனிப்பும் சிகிச்சையும், நிறத்தை விட குணமே மேலானது என்பதை அந்த இளைஞனுக்கு உணர்த்தியது. தனது பழைய செயலுக்காக வருந்திய அவர், ஸ்வேதாவை மீண்டும் திருமணம் செய்ய விரும்பி அவர் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
ஆரம்பத்தில் தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைத்து மறுத்த ஸ்வேதா, பிறகு அந்த இளைஞனின் உண்மையான மாற்றத்தை கண்டு மனமிறங்கினார். இறுதியில் இருவருக்கும் அதே இடத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து அவர்களை எடைபோடுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த சம்பவம் சமூகத்திற்கு உணர்த்துகிறது. உண்மையான அழகு என்பது முகத்தில் இல்லை, அகத்தில் தான் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.