மைதானத்தில் தோல்வி, மேடையில் அதிரடி! மொஹ்சின் நக்வியை புறக்கணித்த இந்திய இளம் வீரர்கள்!
December 22, 2025

துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. பாகிஸ்தான் நிர்ணயித்த 348 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் வீரர் சமீர் மின்ஹாஸ் 172 ரன்கள் குவித்த நிலையில், இந்திய தரப்பில் தீபேஷ் 36 ரன்கள் எடுத்தார்.
போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியைப் புறக்கணித்தனர். நக்வியிடமிருந்து பதக்கங்களைப் பெற மறுத்த வைபவ் தலைமையிலான இந்திய அணி, மற்றொரு அதிகாரியிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டது. மூத்த வீரர்களின் வழியைப் பின்பற்றி எடுக்கப்பட்ட இந்த முடிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.