சூர்யகுமார் நீக்கம்? டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் கேப்டனாக வாய்ப்பு!

சூர்யகுமார் நீக்கம்? டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் கேப்டனாக வாய்ப்பு!

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழவுள்ளன. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரின் ஃபார்ம் பிசிசிஐ-க்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண்டியாவிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க தேர்வுக் குழு ஆலோசித்து வருகிறது.

பிசிசிஐ வட்டாரங்களின்படி, ஹர்திக்கின் சிறப்பான கேப்டன்சி சாதனை மற்றும் ஐபிஎல் அனுபவம் அவருக்கு சாதகமாக உள்ளது. அவர் ஏற்கனவே இந்திய அணியை 16 போட்டிகளில் வழிநடத்தி 11 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். இந்த மாற்றம் உலகக் கோப்பையில் இந்தியாவின் பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *