ஐந்து வயதில் தாயாகி உலகையே உறைந்து போகச் செய்த லினா மெடினா

ஐந்து வயதில் தாயாகி உலகையே உறைந்து போகச் செய்த லினா மெடினா

மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் வியக்கத்தக்க நிகழ்வாக, பெரு நாட்டைச் சேர்ந்த லினா மெடினா தனது ஐந்தாவது வயதில் தாயானார். 1933-ல் பிறந்த லினாவின் வயிறு திடீரென பெருக்கத் தொடங்கியபோது, அது கட்டி என்று நினைத்த பெற்றோருக்கு மருத்துவர்கள் அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தந்தனர். 1939-ஆம் ஆண்டு மே 14 அன்று, அறுவை சிகிச்சை மூலம் அவர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மூன்று வயதிலேயே அவருக்குப் பருவம் அடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் விவாதங்களை உண்டாக்கியதுடன் மருத்துவ உலகிற்கு மிகப்பெரிய சவாலாகவும் அமைந்தது. குழந்தையின் தந்தை யார் என்பது குறித்து லினா இறுதிவரை வாய் திறக்கவில்லை. லினாவின் முதல் மகன் தனது தாயை ஒரு சகோதரியாகவே கருதி வளர்ந்து வந்தார். பின்னர் 1972-ல் திருமணம் செய்து கொண்ட லினா, தனது இரண்டாவது மகனைப் பெற்றெடுத்து ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *