பழைய வாகன விற்பனை விதிகளில் மெத்தனம் நீதிமன்றம் கடும் கண்டனம்
December 18, 2025

பழைய வாகனங்களின் விற்பனை மற்றும் உரிமையாளர் மாற்றத்தை முறைப்படுத்தத் தவறிய டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பழைய கார் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்தனர்.
இன்னும் சில குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து மத்திய மற்றும் டெல்லி அரசுகள் நான்கு வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளின்படி டீலர்கள் பதிவு செய்யாதது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.