இம்ரான் கானின் ஹகிகி ஆசாதி முழக்கம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு
December 17, 2025

சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுத்த ஹகிகி ஆசாதி என்ற முழக்கம் பாகிஸ்தான் அரசையும் ராணுவத்தையும் அதிர வைத்துள்ளது. சிறையில் உறவினர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இம்ரான் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். கைபர் பக்துன்க்வா முதல்வர் இந்த முழக்கத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றி வருகிறார்.
உண்மையான சுதந்திரம் என பொருள்படும் ஹகிகி ஆசாதி இப்போது பிடிஐ கட்சியின் முக்கிய மந்திரமாக மாறியுள்ளது. சுதந்திரம் அல்லது மரணம் என்ற இம்ரானின் நிலைப்பாடு தொண்டர்களிடையே காட்டுத்தீயாக பரவியுள்ளது. தற்போதைய ஆட்சிக்கு எதிராக இறுதிவரை போராட ஆதரவாளர்கள் தயாராகி வருவதால் பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது.