கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூர கொலை செய்த மாந்திரீகனுக்கு ஆயுள் தண்டனை
December 17, 2025

உதய்பூரில் ஆசிரியர் மற்றும் அவரது தோழியை கொடூரமாக கொலை செய்த மாந்திரீகன் பலேஷிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 2022 ஆம் ஆண்டு காட்டில் இருவரையும் உடலுறவு கொள்ள தூண்டிய மாந்திரீகன், அவர்கள் நெருக்கமாக இருந்தபோது உடல் மீது ஃபெவிக்விக் ஊற்றி ஒட்டவைத்துக் கொன்றான். பொறாமை காரணமாக இந்த நயவஞ்சக செயலை அவன் செய்துள்ளான்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிக்கு நான்கு லட்சம் அபராதமும் விதித்தது. சமூகத்தில் இத்தகைய கொடூர செயல்கள் மன்னிக்க முடியாதவை என்று நீதிபதி குறிப்பிட்டார். மாந்திரீகத்தின் பெயரால் செய்யப்பட்ட இந்த இரட்டை கொலை வழக்கின் தீர்ப்பு தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.