குழந்தைகளின் கல்லீரலை பாதிக்கும் ஆபத்தான பானங்கள் குறித்த அதிர்ச்சி தகவல்
December 17, 2025

சர்க்கரை கலந்த சோடா மற்றும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் குழந்தைகளின் கல்லீரலில் தேவையற்ற கொழுப்பை அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆற்றல் பானங்கள் மற்றும் போபா டீ போன்றவற்றில் உள்ள அதிகப்படியான இனிப்பு கல்லீரல் செல்களை சிதைப்பதாக இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி எச்சரித்துள்ளார்.
இத்தகைய பானங்கள் கல்லீரலில் நச்சுத்தன்மையை அதிகரித்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் சூழலை உருவாக்குகின்றன. கல்லீரலைப் பாதுகாக்க செயற்கை பானங்கள் மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.