ஆபரேஷன் சிந்துரின் முதல் நாளிலேயே இந்தியா தோல்வி அடைந்ததா பிருத்விராஜ் சவான் சர்ச்சை கருத்து
December 17, 2025

ஆபரேஷன் சிந்துர் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் முதல் நாளிலேயே இந்தியா தோல்வியைச் சந்தித்ததாகவும், அந்த சமயத்தில் இந்திய விமானப்படை முற்றிலும் முடங்கியிருந்ததாகவும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
எதிர்காலப் போர்கள் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணைகளைச் சார்ந்தே இருக்கும் என்று கூறிய அவர், இவ்வளவு பெரிய இராணுவப் படை தேவையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆபரேஷன் சிந்துரின் போது தரைப்படை ஒரு கிலோமீட்டர் கூட முன்னேறவில்லை என்பதால், நவீன தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதே சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.