ஒரு லட்ச ரூபாய் கடன் எழுபத்தி நான்கு லட்சமானது கம்போடியாவில் சிறுநீரகத்தை பறிகொடுத்த விவசாயி
December 17, 2025

மகாராஷ்டிராவின் சந்திரப்பூர் மாவட்டத்தில் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கிய ரோஷன் என்ற விவசாயி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். வட்டிக்கு மேல் வட்டி குவித்து 74 லட்ச ரூபாயாக கடன் உயர்ந்ததால், நிலம் மற்றும் உடைமைகளை இழந்தும் கடன் சுமை குறையவில்லை.
மிரட்டலுக்கு பயந்து ஏஜென்ட் மூலம் கம்போடியா சென்ற அவர், தனது சிறுநீரகத்தை 8 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார். இவ்வளவு செய்தும் கடன் தீராத நிலையில், காவல்துறையின் அலட்சியத்தால் விரக்தியடைந்த விவசாயி தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக எச்சரித்துள்ளார்.