முதலீடுகளில் இந்தியாவுக்குப் பின்னடைவு! 12 நாட்களில் ₹17,955 கோடி திரும்பப் பெற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
December 15, 2025

டிசம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களில், இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) ₹17,955 கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றுள்ளனர். நவம்பர் மாதத்தில் ₹3,765 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்ததைத் தொடர்ந்து இந்த பெரிய அளவிலான பணத்தை வெளியேற்றியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை, FPIs சந்தையிலிருந்து மொத்தம் ₹1.60 லட்சம் கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் பாதுகாப்பான வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் காரணமாக முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுகின்றனர் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தத் தொடர்ச்சியான மூலதனத் திரும்பப் பெறுதல் நாட்டின் நிதி நிலைத்தன்மையையும் பங்குச் சந்தையையும் பெரிதும் பாதிக்கிறது.