காஷ்மீர் சிறையில் சுரங்கம் தோண்டி தப்ப முயன்ற மசூத் அசார்; பிடிபட்டபோது கடுமையாக தாக்கப்பட்டதாகவும் கண்ணீர்

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பின் தலைவன் மசூத் அசார், 1990களில் ஜம்மு-காஷ்மீர் சிறையில் இருந்து சுரங்கம் தோண்டி தப்ப முயன்ற தனது தோல்வியடைந்த முயற்சியை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். கோட் பல்வால் அதி-பாதுகாப்புச் சிறையில் இருந்து தப்பிக்க தான் செய்த முயற்சி குறித்த விவரங்களை சமீபத்திய ஆடியோ கிளிப்பில் அவர் விவரித்துள்ளார். தனது திட்டத்தின் கடைசி நாளில் சிறை அதிகாரிகளால் பிடிபட்டதாகவும், அதன் விளைவாகத் தானும் மற்ற பயங்கரவாதிகளும் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் அசார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகவும் தேடப்படும் இந்த பயங்கரவாதி 1994 முதல் 1999 வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தன்னைத் தாக்கிய சிறை அதிகாரிகளைக் கண்டு தான் இன்றும் பயப்படுவதாக அசார் ஒப்புக்கொண்டுள்ளார். தோல்வியடைந்த முயற்சிக்குப் பிறகு, அவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டதாகவும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். 1999 டிசம்பரில், IC-814 விமானக் கடத்தலுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.