ஆயுளை நீட்டித்து இளமையாக வாழ! இந்த அதிசய நெல்லிக்கனியை எப்படி சாப்பிடுவது தெரியுமா?

நெல்லிக்காய் பழங்காலம் தொட்டு இன்றுவரை அனைவருக்கும் பிடித்த ஒரு கனி என்பதில் சந்தேகமில்லை. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப் போடலாம் என்று சித்தர்கள் உட்பட அனைவரும் கூறுகின்றனர். நவீன ஆராய்ச்சிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன; நெல்லிக்காயில் அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, முதுமையை விரட்ட உதவுகின்றன.
நெல்லிக்காயில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவுக்கு அதிக அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது. ஒரு நெல்லிக்காயில் சுமார் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து உள்ளது. மேலும், இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இதயக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், கண்பார்வைக் குறைபாடுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் நெல்லிக்காய் உதவுகிறது. திரிபலா சூரணம் போன்ற ஆயுர்வேத மருந்துகளிலும் இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.