இந்திய செமிகண்டக்டர் கனவுக்கு தீவிரம் ஊட்டும் இன்டெல்-டாட்டா கூட்டணி

இந்தியாவை செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றும் லட்சியத்துடன், தொழில்நுட்ப ஜாம்பவான் இன்டெல் (Intel) மற்றும் டாட்டா குழுமம் (Tata Group) ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், அதிநவீன செமிகண்டக்டர் சிப்கள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, அசெம்பிள் செய்யப்படும். டாடா எலெக்ட்ரானிக்ஸின் குஜராத் மற்றும் அசாமில் உள்ள புதிய ஃபப் (Fab) மற்றும் ஓசாட் (OSAT) ஆலைகளில் இன்டெல் தயாரிப்புகள் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் செய்யப்படும்.
இந்த கூட்டு முயற்சி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கமளிப்பதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவின் தொழில்நுட்ப தற்சார்பை வலுப்படுத்தும். $1.18 லட்சம் கோடி மதிப்பிலான இந்த மாபெரும் திட்டங்கள் இந்தியாவின் ஏஐ பிசி (AI PC) சந்தையை இலக்காகக் கொண்டுள்ளன. இந்த சந்தை 2030-க்குள் உலகளவில் முதல் 5 இடங்களில் இந்தியாவைக் கொண்டுசெல்லும் என இரு நிறுவனங்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.