திருமண இரவில் மணமகனை மயக்கிவிட்டு தப்பி ஓடிய புதுப்பெண்! நகை, பணத்துடன் மாயமானதால் குடும்பத்தினர் மருத்துவமனையில்

ராஜஸ்தான் மாநிலம் தௌல்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு ஒரு புதுப்பெண், திருமண இரவில் மணமகனையும், மாமியார் வீட்டுக்காரர்களையும் மய’க்க’மூ’ட்டி விட்டு, தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்துடன் தப்பி ஓடிவிட்டார். கடன் வாங்கி $1.20$ லட்சம் ரூபாய் கொடுத்து இந்தத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தௌல்பூரில் உள்ள பிப்பகேரா கிராமத்தைச் சேர்ந்த சோனு, புதுப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் சடங்குகளைச் செய்தபோது, மணமகள் வேறு திட்டத்துடன் செயல்பட்டுள்ளார். நள்ளிரவில் அவர் அனைவருக்கும் ந’கை’ய’மூ’ட்டப்பட்ட உணவை அளித்துள்ளார்.
இதையடுத்து, மணமகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மய’ங்கி விழுந்ததும், மணமகள் அறையில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்துடன் தப்பி ஓடினார். காலையில் விழித்த குடும்பத்தினர் இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போ’லீ’ஸா’ருக்கு தகவல் தெரிவித்தனர். சோனுவின் நிதிநிலைமை மோசமாக இருந்ததால், கடன் வாங்கி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. போ’லீ’ஸார் புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் தலைமறைவான மணமகளை தேடி வருகின்றனர். மய’க்க’முற்ற குடும்ப உறுப்பினர்கள் பசாய் நவாப் சிஎச்’சி’யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.