அரசியல் கட்சிகளுக்கு ‘அடையாளம் தெரியாத’ நன்கொடை: உச்ச நீதிமன்றம் மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரியது

அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகை வரையிலான பெயரிடப்படாத ரொக்க நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெறுவதற்கு அனுமதிக்கும் வருமான வரிச் சட்டத்தின் விதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் (PIL) நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கேம் சிங் பாட்டியால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், அரசியல் கட்சிகளின் வருமான விலக்கு தொடர்பான வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 13A(d)-இன் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மைக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விதியானது, ரூ.2,000க்கு மேல் ரொக்கமாக வரும் நன்கொடைகள் குறித்த தகவலை வழங்காததால், அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரங்கள் பற்றி அறிந்துகொள்ளும் குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக மனுவில் வாதிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 4 வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது.