ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! லைஃப் சான்றிதழை வீட்டிலிருந்தே ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமானது, ஏனெனில் இந்த மாதத்தில்தான் அவர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழ் அல்லது ‘ஜீவன் பிரமாண்’ சமர்ப்பிக்க வேண்டும். சரியான நபருக்கு ஓய்வூதியம் சென்றடைவதை உறுதி செய்ய இந்தச் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். சமர்ப்பிக்கத் தவறினால், ஓய்வூதியம் நிறுத்தப்படலாம். முன்பு இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வங்கி அல்லது அஞ்சல் நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் இப்போது அந்தச் சிரமம் நீங்கிவிட்டது.
மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத் துறையால் (DoPPW) தொடங்கப்பட்ட ஜீவன் பிரமாண் செயலி மூலம் இப்போது வீட்டிலிருந்தே ஆன்லைனில் லைஃப் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் மொபைல்களில் AadhaarFaceRd மற்றும் Jeevan Pramaan Face செயலிகளைப் பதிவிறக்கம் செய்து, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் பிற ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை அளித்து இந்தப் செயல்முறையை முடிக்கலாம். இந்த புதிய ஏற்பாடு மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.