காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போடச் சொல்வது ஏன்? சும்மா தண்டனை இல்லை, அறிவியல்பூர்வமான ‘சூப்பர் மூளை யோகா’ ரகசியம்!

காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போடச் சொல்வது ஏன்? சும்மா தண்டனை இல்லை, அறிவியல்பூர்வமான ‘சூப்பர் மூளை யோகா’ ரகசியம்!

பள்ளிக்காலத்தில் குறும்புகளுக்கு வழங்கப்படும் காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போடும் தண்டனைக்குப் பின்னால் சுவாரஸ்யமான அறிவியல் காரணம் உள்ளது. இது வெறும் தண்டனை மட்டுமல்ல; இது ஒருவித மூளைக்கான பயிற்சியாகக் கருதப்படுகிறது. ஆய்வுகளின்படி, தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடிப்பது காது மடல்களில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகளைத் தூண்டுகிறது. இதனால் மூளையின் வலது மற்றும் இடது பக்கங்கள் செயல்படத் தொடங்கி, கவனம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பயிற்சி ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு இவ்வாறு செய்வதால் கூட மூளையின் அலைகள் (Alpha Waves) செயல்பாட்டினை அதிகரிக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தச் செயல் மூளையின் மின் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், மன அழுத்தத்தைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதனால், ஆசிரியர்கள் பாரம்பரியமாகச் செய்த இந்தச் செயல், மாணவர்களுக்குத் தெரியாமலேயே அறிவாற்றல் நன்மைகளை அளித்து வந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *