பிரபல மாடல் சான் ரேச்சல் தற்கொலை புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரியில் பிரபலமான மாடல் சான் ரேச்சலின் உடல் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது, இது மாடலிங் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறவெறிக்கு எதிராக குரல் கொடுத்த இந்த மாடல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது அறையில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், “எனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல” என்று எழுதப்பட்டுள்ளதாகத் தகவல்.
கடந்த ஆண்டுதான் ரேச்சல் திருமணம் செய்துகொண்டார். போலீஸ் வட்டாரங்களின்படி, தனது மாடலிங் பணிக்காக அவர் தனது நகைகளை அடகு வைத்திருந்ததால் நிதி நெருக்கடி இருந்திருக்கலாம். அண்மையில் அவர் ஏற்பாடு செய்த சில ஃபேஷன் ஷோக்களில் ஏற்பட்ட நஷ்டமும் இந்த தீவிர முடிவை எடுக்க அவரைத் தூண்டியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை தொடங்கிவிட்டனர்.