மைதானத்தில் இருந்து அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போதைய நிலை என்ன

சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியின் போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது உடல்நிலை குறித்த முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். ஹரியானாவுக்கு எதிரான போட்டியின் போது கடுமையான இரைப்பை குடல் அழற்சி காரணமாக அவர் புனேவில் உள்ள ஆதித்யா பிர்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை முழுமையாக ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது தான் குணமடைந்து வருவதாகவும் விரைவில் மைதானத்திற்கு திரும்புவதாகவும் ஜெய்ஸ்வால் ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
தனது சிகிச்சைக்காக உதவிய மருத்துவக் குழுவினருக்கும் பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் அவர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். தற்போதைய ஓய்வு காரணமாக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் இருந்தாலும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜெய்ஸ்வால் மீண்டும் அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.