புதிய ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள், ஆன்லைனில் டிக்கெட் எடுக்க ஆதார் கட்டாயம்
September 18, 2025

இந்திய ரயில்வே, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதியின்படி, IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் நடக்கும் மோசடிகளைத் தடுக்கவும், கள்ளச் சந்தையை ஒழிக்கவும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி ஆன்லைன் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும், ரயில்வே கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. மோசடிகளைத் தடுக்கும் வகையில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கும் OTP கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்.