நடிகர் விஜய் மற்றும் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் மீது ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்

நடிகர் விஜய் மற்றும் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் மீது ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்

தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார், அக்கட்சியின் தொண்டர்கள் தன்னை ஆபாசமாக பேசுவதாகவும் மார்பிங் புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவதாகவும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் தொடரும் இந்த அத்துமீறல்களைக் கண்டிக்கத் தவறிய நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியை விட்டு வெளியேறும் பெண்கள் திட்டமிட்டுத் துன்புறுத்தப்படுவதாகவும், இதற்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரஞ்சனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பு குறித்து மேடையில் பேசும் விஜய், நிஜத்தில் தனது தொண்டர்களின் அவதூறு செயல்களைத் தடுக்க முன்வருவதில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *