திருமணத்தை நிறுத்த காதலியின் தலையை துண்டித்த கொடூரன்! 6 நாட்களுக்குப் பிறகு சிக்கிய கொலையாளி
December 15, 2025

ஹரியானாவின் யமுனாநகரில் நடந்த பயங்கரமான கொலையின் மர்மத்தை காவல்துறை அவிழ்த்துள்ளது. ஃபர்கான் என்கிற பிலால் என்ற இளைஞன், தனது திருமணத்திற்கு சற்று முன்பு கைது செய்யப்பட்டான். காதலியுடன் உறவில் இருந்தபோது, தனது திருமணத்தைப் பற்றி குடும்பத்தினரிடம் சொல்லிவிடுவேன் என்று காதலி மிரட்டியதால், பயந்துபோன பிலால், டிசம்பர் 6 இரவு கறி வெட்டும் கத்தியால் காதலியின் தலையை துண்டித்தார். சஹாரன்பூர்-பஹதூர்கர் சாலை ஓரத்தில் உடலை வீசினார். சம்பவத்தின் ஆறு நாட்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். பிலால் சுட்டிக் காட்டிய இடத்தில் தலையையும் போலீசார் மீட்டுள்ளனர்.