கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஒழிக்க ஒரு தடுப்பூசி போதும் இதோ முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க ‘தேசிய ஹெச்பிவி (HPV) தடுப்பூசி இயக்கம்’ தொடங்கப்பட்டுள்ளது. ஹியூமன் பாப்பிலோமா வைரஸால் ஏற்படும் இப்புற்றுநோய், இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் இலக்கை எட்ட, 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக இத்தடுப்பூசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது ஒரு நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருத்துவ முறையாகும்.
இந்த ஒரு தடுப்பூசி 90% வரை பாதுகாப்பு அளிப்பதோடு, எதிர்கால ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இதில் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை என ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 2030-க்குள் இந்நோயை முற்றிலும் ஒழிக்க பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு அரசு மையங்களில் இந்த இலவச தடுப்பூசியைப் பெற்றுத் தருவது அவசியமாகும். உங்கள் மகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும், புற்றுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கவும் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.