மோடி சகாப்தத்திற்குப் பிறகு? ஜோதிடத்தின்படி அடுத்த பிரதமர் பதவிக்கு யார் போட்டியாளர் தெரியுமா

இந்திய அரசியலில் தற்போது ஒரு கேள்வி அனைவரின் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறகு நாட்டின் ஆட்சி பொறுப்பை யார் ஏற்பார்? அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்லாது, ஜோதிட உலகமும் இந்த கேள்விக்கு விடையைத் தேடி வருகிறது. கிரகங்களின் நகர்வுகள் மற்றும் ஜாதகங்களின் அடிப்படையில் மூன்று முக்கிய தலைவர்கள் வலுவான போட்டியாளர்களாக உருவெடுத்துள்ளனர்.
இந்தப் பட்டியலில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலிடத்தில் உள்ளார். அவரது ஜாதகத்தில் சனி மற்றும் குருவின் சக்தி வாய்ந்த நிலைகள் அவரை தலைமைப் பதவிக்கு ஒரு சிறந்த வேட்பாளராகக் காட்டுகின்றன. மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் இதில் முக்கிய இடம் பெறுகிறார். ஏனெனில், அவரது ஜாதகத்தில் சூரியன் மற்றும் செவ்வாயின் சாதகமான நிலைகள் அவரை ஒரு திறமையான நிர்வாகியாகக் காட்டுகின்றன. பாஜகவின் தலைமை வியூகவாதியான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயரும் இதில் அடிபடுகிறது. அவரது ஜாதகத்தில் ராகு மற்றும் சந்திரனின் நிலை அவரை ஆட்சிக்கு மிக நெருக்கமாக கொண்டு வந்துள்ளது.