30 ஆண்டுகளாக இன்ஜின் ஆயில் குடிக்கும் நபர்; மருத்துவமனைக்கே சென்றதில்லை என தகவல்!
September 20, 2025

கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக இன்ஜின் ஆயில் குடித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘ஆயில் குமார்’ என்று அழைக்கப்படும் அந்த நபர் தினமும் சுமார் 7-8 லிட்டர் இன்ஜின் ஆயில் அருந்துகிறார். அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த வினோத பழக்கம் இருந்தபோதிலும், அவர் இதுவரை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றதில்லை.
இதுகுறித்து அந்த நபர் கூறுகையில், இது ஐயப்பன் அருளால் மட்டுமே சாத்தியம் என தெரிவித்துள்ளார். மேலும், வீடியோவில் மற்றவர்கள் உணவைக் கொடுத்தபோது, அவர் அதை ஏற்க மறுத்து இன்ஜின் ஆயில் மட்டுமே குடிப்பதைப் பார்க்கலாம். இது அறிவியல் ரீதியாக சாத்தியமில்லாத ஒன்று என சிலர் கூறுகின்றனர், அதேநேரம் இன்னும் சிலர் அவரது இந்த வினோத பழக்கத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர்.