2 கோல்கப்பாவுக்காக நடுரோட்டில் போராட்டம்! குஜராத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய பெண்

2 கோல்கப்பாவுக்காக நடுரோட்டில் போராட்டம்! குஜராத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய பெண்

குஜராத்தில் உள்ள வதோதரா நகரில், சுரசாகர் ஏரி அருகே ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்தது. ஒரு தெருவோரக் கடைக்காரர் 20 ரூபாய்க்கு 6 கோல்கப்பாக்களுக்குப் பதிலாக 4 கோல்கப்பாக்களை மட்டுமே கொடுத்ததால், ஒரு பெண் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கூடுதல் கோல்கப்பாக்கள் கிடைக்கும் வரை அங்கிருந்து நகர மறுத்த அப்பெண்மணி, போலீஸ் வந்த பிறகும் அங்கேயே அழுதுகொண்டிருந்தார். இந்த வித்தியாசமான போராட்டத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடியது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, போலீசார் அப்பெண்ணை அங்கிருந்து அகற்றி, போக்குவரத்தை சரிசெய்தனர். ஆனால், அவரது கோல்கப்பாக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா என்பது தெரியவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *