மகளுக்கு நிலம் எழுதியதால் தந்தையின் உடலை தகனம் செய்ய மறுத்த மகன்; 23 மணி நேரம் கிடந்த சடலம்

மகளுக்கு நிலம் எழுதியதால் தந்தையின் உடலை தகனம் செய்ய மறுத்த மகன்; 23 மணி நேரம் கிடந்த சடலம்

தந்தையின் நிலத்தை மகள் தன் பெயருக்கு மாற்றியதால், ஆத்திரமடைந்த மகன் தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்ய மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முதியவரின் உடல் 23 மணி நேரம் வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்தது. பின்னர், சமூகத்தினர், கிராம மக்கள் மற்றும் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மகனுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னரே இறுதிச் சடங்குகள் நடந்தன. இச்சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் தால்மௌ கிராமத்தில் நடந்துள்ளது.

தால்மௌ கிராமத்தைச் சேர்ந்த சின்ன அஹிர்வார் (65) என்பவரின் இரண்டு ஏக்கர் நிலம் அவரது மகள் சுனிதாவுக்குப் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மனக்கவலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சின்ன அஹிர்வார் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் ராஜு அஹிர்வார் தகனம் செய்ய மறுப்பு தெரிவித்தார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், நிலத்தை சகோதரர் மற்றும் சகோதரிக்கு ஒரு ஏக்கர் எனப் பிரித்து வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்ட பின்னரே இறுதிச் சடங்கு நடைபெற்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *