பாகிஸ்தானின் ‘இஸ்லாமிய நேட்டோ’ திட்டம் இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

பாகிஸ்தானின் ‘இஸ்லாமிய நேட்டோ’ திட்டம் இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

கத்தாரில் உள்ள தோஹாவில் 60 முஸ்லிம் நாடுகளின் கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், பெரிய அளவிலான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், இக்கூட்டத்தில் பாகிஸ்தான், எகிப்து, மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அமெரிக்காவின் ‘நேட்டோ’ அமைப்பைப் போன்று ‘இஸ்லாமிய நேட்டோ’வை உருவாக்க முன்மொழிந்தன.

பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்தாலும், உலகிலேயே அணுசக்தி கொண்ட ஒரே முஸ்லிம் நாடு என்ற நிலையை பாகிஸ்தான் பயன்படுத்தி, இந்தப் பிரேரணையின் மூலம் இந்தியாவுக்கு ஒரு செய்தியை அனுப்ப முயல்கிறது. நேட்டோ விதிகளின்படி, ஒரு உறுப்பினர் நாடு தாக்கப்பட்டால், மற்ற நாடுகள் அனைத்தும் கூட்டாகச் செயல்படும். இதன் மூலம், இந்தியாவுடனான எந்தவொரு மோதலிலும் பிற முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் முயல்வதாகத் தெரிகிறது, இது இந்தியாவுக்கு கவலை அளிக்கும் விஷயமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *