துக்க வீட்டிற்கு சென்ற குடும்பம்! வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த தங்க நகைகளையும் திருடிய திருடர்கள்

புனே காத்ரஜ் பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்காகச் சென்ற ஒரு குடும்பத்தின் வீட்டில் அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, வீட்டில் இருந்த தங்க நகைகளை வாஷிங் மெஷினின் உள்ளே மறைத்து வைத்திருந்தனர். ஆனால், குடும்பத்தினர் லாத்தூரில் இருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அந்தப் பாதுகாப்பான இடத்தில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.
நவம்பர் 26 இரவு முதல் நவம்பர் 28 காலைக்கு இடையில் இந்தச் சம்பவம் நடந்தது. வாஷிங் மெஷினில் நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தையும் திருடர்கள் கண்டுபிடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நகைகள் எப்படி திருடப்பட்டது என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.