ஓடும் ரயிலில் இருந்து பண மழை! ரூபாய் நோட்டுகளை அள்ள குவிந்த மக்கள்

ஓடும் ரயிலில் இருந்து பண மழை! ரூபாய் நோட்டுகளை அள்ள குவிந்த மக்கள்

உத்தரப் பிரதேசத்தின் பரேலி அருகே, ஓடும் ரயிலில் இருந்து திடீரென ₹500 மற்றும் ₹100 நோட்டுகள் கீழே விழுந்தன. ஃபரித்பூர் நிலையம் அருகே நடந்த இந்தச் சம்பவத்தால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கீழே விழுந்த பணத்தை எடுப்பதற்காக, மக்கள் தங்கள் செல்போன் மற்றும் டார்ச் லைட் உதவியுடன் ரயில் தண்டவாளத்தில் குவிந்தனர்.

ரயிலுக்குள் இருந்த ஒருவர் பணப் பையை ஜன்னல் வழியாக வெளியே வீசியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விழுந்த நோட்டுகள் உண்மையானதா அல்லது போலியானதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *